Powered By Blogger

வெள்ளி, 30 மார்ச், 2012

மனதோடு மட்டும்...: மின்சாரம் வேண்டுமாம் மின்சாரம்...?! தொடரும் கூடங்குளத்தின் அவலம் !!

மனதோடு மட்டும்...: மின்சாரம் வேண்டுமாம் மின்சாரம்...?! தொடரும் கூடங்குளத்தின் அவலம் !!
 அணுமின் நிலையங்களை அமைக்கும் போது அதை சுற்றி 30 கி.மீ தூரத்தில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. இந்த பயிற்சியினை கொடுக்க முதலில் ஏற்பாடு செய்யட்டும்...அதன்பின் தெரிந்துவிடும் இது எத்தகைய தன்மை வாய்ந்தது என்று...! இதுவரை இடிந்தகரை மக்கள் மட்டும் போராட்டத்தில் இருக்கிறார்கள் இனி சுற்றி இருக்கும் பிற கிராமங்களும் போராடபோகின்றன...இது தான் நடக்க போகிறது...!
 அணு உலையின் மீதான மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசின் கடமை. இதை செய்ய தவறிய அரசு, இப்போது அதிரடியாக காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு இருப்பது மட்டும் என்ன நியாயம்...?!//
 செயற்கையான மின்வெட்டை உருவாக்கி ,அதிகார வர்கத்தை வைத்து பயமுறுத்தி கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கப் பார்க்கிறார்கள் .......ஆனால் அது நடக்காது!

மிகச் சிறந்த Video Converter இலவசமாக | Karpom

மிகச் சிறந்த Video Converter இலவசமாக | Karpom
 அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே.

புதன், 28 மார்ச், 2012

பெயரில்லா சொன்ன முண்டத்துக்கு !

பத்தாயிரம் அல்லது ஐயாயிரம் அல்லது  வெறும் ஆயிரம் பேரை கொண்டு எங்கள் ஊரில் ஒரு அணு உலை வைக்க ஒரு சிறிய அளவில் ஒரு சின்ன போராட்டம் பண்ணுங்களே ?..........உங்களுக்கு தைரியம் இருந்தால் !......

நாங்கல்லாம் தேசத் துரோகிகளாமாம் ! ~ கூடல் பாலா

நாங்கல்லாம் தேசத் துரோகிகளாமாம் ! ~ கூடல் பாலா

புதன், 15 பிப்ரவரி, 2012

மத்திய அரசுக்கு கூடங்குளம் மக்கள் சார்பாக சில கோரிக்கைகள் !

1.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு கூடங்குளம் அணு உலை அருகில் ஒரு பிளாட் கட்டி அவர்கள் அங்கு குடியேற வேண்டும் .
2 .மத்திய அரசு அமைத்த 15 பேர் கொண்ட நிபுனர் குழுவின் குடும்பத்தினர்களுக்கு கூடங்குளம் மற்றும் இடிந்தகரை பகுதிகளில் வீடுகள் கட்டி அங்கு அவர்கள் குடியேற வேண்டும் .
3 .மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்களின் குடும்பத்தினர்களுக்கு கூடங்குளம் அணு உலை அருகில் ஒரு பிளாட் கட்டி அங்கு அவர்கள் குடியேற வேண்டும் .
4 .கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் G.k.வாசன் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு கூடங்குளம் பகுதிகளில் வீடுகள் கட்டி அங்கு அவர்கள் குடியேற வேண்டும் .
5 .மத்திய நிதி அமைச்சர் ப .சிதம்பரம் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இடிந்தகரை பகுதிகளில் வீடுகள் கட்டி அங்கு அவர்கள் குடியேற வேண்டும் .
(ஏன் என்றால் அவர்கள் தான் கூடங்குளம் அணு உலை மிக மிக பாதுகாப்பானது என்று கூறியவர்கள்
மேற்கண்ட அணைத்து உதவிகளும் இன்னும் சுமார் நான்கு (4 ) மாதத்தில் உடனடியாக செயல் படுத்த வேண்டும் .
(அல்லது)

6 .முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் சுமார் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அணு உலை ஒன்றும் ,
7.மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்களின் சொந்த ஊரான பாண்டிச்சேரியில் சுமார் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அணு உலை ஒன்றும் ,
8 .மத்திய நிதி அமைச்சர் ப .சிதம்பரம் அவர்களின் சொந்த ஊரில் சுமார் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அணு உலை ஒன்றும் ,
9.கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் G.k.வாசன் அவர்களின் சொந்த ஊரில் சுமார் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அணு உலை ஒன்றும் ,
10.மற்றும் ஏனைய காங்கிரஸ் ,பாரதீய ஜனதா தலைவர்களின் சொந்த ஊரில் அணு உலை அமைக்க அவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் .
மேற்கண்ட அணைத்து அணு உலைகளை நிறுவதற்கு ரஷ்யா யுடன் உடனடியாக ஓப்பந்தம் செய்து அதற்குரிய வேலைகளை தொடங்க வேண்டும் .
இவை அனைத்தும் இன்னும் நான்கு (4 )மாதத்திற்குள் செயல் பட வேண்டும் .அப்படி செயல் படுத்த பட்டால் நான்கு மாதத்திற்கு பிறகு கூடங்குளம் அணு உலை வேலை நடப்பதற்கும் அணு உலை செயல் பட கூடங்குளம் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் .